எஸ்பிஐ வங்கியின் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 48 மணிநேரத்திற்குள் தானாகவே திரும்ப பெறப்படாவிட்டால் வாடிக்கையாளர் 2 வழிகளில் புகாரளிக்கலாம். UPI பணப் பரிவர்த்தனை ஒரு வேளை தோல்வியடைந்து உங்களது தொகை திருப்பி தரப்படவில்லை எனில், யோனோ லைட் ஆப் வழியே நீங்கள் புகாரை பதிவுசெய்யலாம். இதற்கு நீங்கள் செயலியின் “பேமெண்ட் ஹிஸ்டிரி”-க்கு செல்லவும். அதன்பின் தோல்வியடைந்த பரிவர்த்தனையை தேர்ந்தெடுக்கவும்.

அதனை தொடர்ந்து “Raise Dispute” என்பதை தேர்ந்தெடுத்து உங்களது புகாரை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். செயலியில் பணம் செலுத்துதல் குறித்த புகாரை அளித்த பிறகு பரிவர்த்தனை விபரங்களையும் அனுப்பலாம். உங்களது விவரங்களை support.upi@sbi.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். நீங்கள் பணம் செலுத்திய தேதி, தொகை மற்றும் 12 இலக்க பரிவர்த்தனை குறிப்பு எண்ணை அனுப்பவும். பணத்தை திரும்ப பெறுதல் குறித்த சிக்கல்களுக்கு நீங்கள் RRN அதாவது மீட்டெடுப்பு குறிப்பு எண்ணை அனுப்பலாம்.