டைரக்டர் சுந்தர்.சி மிகப்பெரிய பட்ஜெட்டில் சங்கமித்ரா எனும் திரைப்படத்தை இயக்க இருந்தார். அந்த திரைப்படத்தின் போஸ்ட்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கயிருந்த அப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்க இருந்தனர். எனினும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த திரைப்படம் தொடங்கவே இல்லை.

தற்போது இத்திரைப்படத்தை மீண்டுமாக கையிலெடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கியுள்ளார். இதில் ஹீரோவாக விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. எனினும் தற்போது விஷால் படத்திலிருந்து விலகிவிட்டாராம். சம்பள பிரச்சனை காரணாமாக அவர் சங்கமித்ராவிலிருந்து விலகிவிட்டார் என சொல்லப்படுகிறது.