உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், இரண்டு மாதங்களுக்கு முன் இறந்த தன்னுடைய தாயார் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை சமீபத்தில் சரிபார்த்துள்ளார்.

அப்போது, கணக்கில் இருந்த தொகையை பார்த்து அவர் வியப்பில் விழுந்தார். காரணம், கணக்கில் ₹10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 (ரூ. 9 லட்சம் கோடிக்கும் அதிகம்) கிரெடிட் செய்யப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.

இதை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அந்தக் கணக்கை முடக்கி விசாரணையை துவக்கியுள்ளனர். இது, கணக்கியல் பிழையா அல்லது மென்பொருள் தானாக உருவாக்கிய எண்ணிக்கையா என்பதை தற்போது வங்கி ஆய்வு செய்து வருகிறது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதும், நெட்டிசன்கள் தீபக்கை “இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்” எனக் கிண்டலுடன் கொண்டாடிய வண்ணம் மீம்கள் உருவாக்கி பரப்பி வருகின்றனர்.

பலரும் இது வங்கியின் கோடிக்கணக்கான தவறுகளுக்கு எடுத்துக்காட்டு எனவும், வங்கி பாதுகாப்பு முறைகள் கேள்விக்குறியாகின்றன என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.