நேற்று உலக இட்லி தினமானது அனுசரிக்கப்பட்டது. சென்ற ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 3.3 கோடி இட்லிகள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாக ஸ்விக்கி நிறுவனமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 6 லட்சம் ரூபாய்கு இட்லி வாங்கியிருக்கிறார்.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களிலேயே இட்லி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3.3 கோடி பிளேட் இட்லி டெலிவரி செய்யப்பட்டு உள்ளது. காலை 8 மணி முதல் 10 மணி வரை அதிகளவில் இட்லி ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவில் ரவா இட்லியானது அதிகமாக விற்பனையாகி இருக்கிறது. அத்துடன் தட்டு இட்லி, மினி இட்லி போன்றவையும் அனைத்து பகுதிகளில் விற்பனையாகி உள்ளது” என ஸ்விக்கி நிறுனம் தகவல் தெரிவித்து உள்ளது