
தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. ஆனால் அதையும் மீறி மாணவர்கள், பைக்கில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் சிறுவர்களிடம் பைக் கொடுத்து அனுப்பினால், பெற்றோர்களுக்கு ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படும். அதோடு அவர்களது வாகன உரிமம் ரத்து செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.