தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிகை சோனியா அகர்வாலின் விஷயத்தில் தோற்றுப் போய்விட்டதாக தற்போது இணையத்தில் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். இந்த படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 7 ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களிலும் சோனியா அகர்வால் நடித்தார்.

அப்போது சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவனுக்கு இடையே காதல் ஏற்பட கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார் சோனியா அகர்வால். ஆனால் இருவரின் திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவது குறித்த செய்தியை அறிந்த ரஜினிகாந்த் நடிகை சோனியாவின் வாழ்க்கை கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக எவ்வளவோ சமாதானம் பேசினாராம். ஆனாலும் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

இதேபோன்று தான் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் வாழ்விலும் நடந்துள்ளது. இரு மகன்களை வைத்துக்கொண்டு உங்களுக்கு உங்கள் சந்தோசம் தான் பெரிதாக போய்விட்டதா என ரஜினி கேட்டாராம். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து விட்டனர். சோனியா அகர்வால் விஷயத்தில் முதலில் ரஜினி தோற்று போன நிலையில் தற்போது மகளின் வாழ்க்கையிலும் தோற்றுப் போய்விட்டார் என்று கூறுகிறார்கள் ரசிகர்கள். மேலும் செல்வராகவனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், சோனியா அகர்வால் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.