கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரத்தான்விளை பகுதியில் ஜான் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியில் ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்த போது ஜான் சுந்தரின் மனைவி ஜெனிட்டா செயலாளர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அப்போது ஜான் சுந்தர் தனது மனைவிக்கு ஆதரவாக செயல்படும்படி ஒரு பெண்ணிடம் கூறினார்.
அதனை அந்த பெண் ஏற்க மறுத்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த பெண்ணை ஜான் சுந்தர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.