தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் பாகுபலி திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தார். இதனையடுத்து அப்படத்தின் 2ஆம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றிகண்ட அவர், அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தை டைரக்டு செய்தார். ரூபாய்.1100 கோடிக்கு மேல் வசூலை குவித்த ஆர்.ஆர்.ஆர் படம் தற்போது விருதுகளை வென்று வருகிறது.

அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியது. அதேபோன்று சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் உலகளவில் பிரபலமான ராஜமவுலி பற்றி பிரபல தெலுங்கு பட இயக்குனரான ராம் கோபால் வர்மா பதிவிட்டு இருப்பது வைரலாக பரவி வருகிறது.

அதாவது “ராஜமவுலி சார் உங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ளுங்கள். உங்கள் மீதுள்ள பொறாமையால் சில இயக்குனர்கள் உங்களை கொல்ல குழு ஒன்றை அமைத்து உள்ளனர். அந்த குழுவில் நானும் உள்ளேன். இப்போது குடி போதையில் இருப்பதால் நான் உண்மையை கூறிவிட்டேன்” என பதிவிட்டு உள்ளார். இவ்வாறு ராம் கோபால் வர்மா போதையில் இப்படி உளறி இருப்பதை அறிந்த நெட்டிசன்கள் அவரை சாடி வருகின்றனர்.