அய்யா வைகுண்டர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அய்யா வழியை பின்பற்றுபவர்கள். இந்த விழாவினை கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று நெல்லை மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கலிங்க சுவாமி கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் வளாகத்தில் வைகுண்டர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அப்போது சமையல் செய்வது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கோர்ட்டின் உத்தரவை மீறி கோவிலின் வளாகத்தில் ஒரு தரப்பினர் எந்தவித முன்னறிவிப்பும் சொல்லாமல் உள்ளே நுழைந்து அடுப்பினை பற்றவைத்து உணவு சமைக்க ஆரம்பித்துள்ளனர்.

எந்தவித முன்னறிவிப்பு பெறாமல் செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல்துறையினர் இந்த பிரச்சனையை தடுத்து உரிய சிவில் கோர்ட்டில் இதற்கான நீதியைப் பெற அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின் காவல்துறையின் நடுநிலைத் தன்மையால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இரு தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாட்டை சிறப்பாக செய்து முடித்தனர்.