இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் Zomato, Swiggy போன்ற உணவு விநியோகம் செய்யும் செயலிகளில் உணவு ஆர்டர் செய்து வாங்கி உண்கின்றனர். இந்நிலையில் Zomato செயலில் ஆர்டர் செய்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு என்பவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தரமற்ற உணவு விநியோகம் செய்யப்பட்டதாக கூறி  சென்னை நுகர்வோர் குறைநீர் ஆணையம் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் Zomato மற்றும் அர்ஜுன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் உணவகம் ரூபாய் 2.5 லட்சம் அபராதம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை நுகர்வோர் குறைநீர் ஆணையம் தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்ட வாடிக்கையாளருக்கு Zomato நிறுவனம் மற்றும் உணவகம் இணைந்து ரூபாய் 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.