கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த கடலை மாவு மீட்கப்பட்ட வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? யாராவது கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.