சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் பவுன்ராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலா டவுன் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், எனது மகன் சஞ்சய் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

இந்நிலையில் மந்தைவெளி பகுதியில் வசிக்கும் ரமேஷ், கண்ணையன், சுரேஷ் ஆகிய 3 பேரும் எனது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.