கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் காஞ்சிரவிளை பகுதியில் தர்மபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷயா காணாமல் போனதால் அவரது பெற்றோர் கருங்கல் காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அக்ஷயாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கொத்தனாரான காட்வின் ஜெரோம் என்பவருடன் அக்ஷயா கருங்கல் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு ஆலயத்தில் வைத்து மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.