சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வடமன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் வடமனின் தோட்டத்தில் ஆய்வு நடத்தி மின்சாரம் திருடியதாக 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதற்கு வரதராஜன் தான் காரணம் என நினைத்து வடமன் நாட்டு துப்பாக்கியால் அவருக்கு சொந்தமான பசுமாட்டை சுட்டார். இதனால் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வடமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.