
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஐயப்பன் நாங்குநேரி கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஐயப்பனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.