இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 14 ஆவது தொகையையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் 11229 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் இகேஒய்சி மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடிக்காமல் உள்ள விவசாயிகளுக்காக மாவட்டத்தில் இன்று  முதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு பகுதி வாரியாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி இன்று  ஊட்டி வட்டாரத்தில் ஊட்டி இத்தலார் வேளாண் கிடங்கு அலுவலகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விவசாயிகள் பயனடையுமாறு அறிவுறுத்தி உள்ளார்.