பிரபல நடிகையான கீதா எஸ் நாயர்(63) நேற்று திடீரென்று மரணமடைந்தார். இவரது மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மலையாளத்தில் வெளியாகும் பல தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் தான் கீதா எஸ் நாயர்.

மேலும் ஏசியாநெட் மற்றும் அமிர்தா டிவியில் ஒளிபரப்பாகிய பல தொலைக்காட்சி தொடர்களில் அவர் நடித்து உள்ளார். பகல்பூரம்’ உள்ளிட்ட படங்களிலும் கீதா எஸ் நாயர் நடித்திருக்கிறார். டிவி தொடர்களில் நடித்துவந்த அவர் எதிர்பாராத வகையில் நேற்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.