பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் அண்மையில் தான் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ஆர்சி-15 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி.

இந்த நிலையில் இவரின் முழு சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமாக உள்ள இவரது முழு சொத்து திப்பு ரூ. 32 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு இவர் ஒரு படத்தில் நடிக்க ரூபாய்.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.