வருடந்தோறும் மார்ச்-8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அம்மாநிலத்தில் வருடந்தோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் நடப்பு ஆண்டும் அம்மாநிலத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதியன்று அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை என அரசு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.