சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஊரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்களும் அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தயுள்ளார். அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது. பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது.