
மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
மேலும் பாஜக கட்சியின் சார்பில் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது.
அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றவரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து அதிமுக கொள்கை தலைவர்களான பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ வெளியிட்டும் அதிமுக தலைவர்கள் அமைதியாக இருந்தது குறித்து அரசியல் கட்சியினர் பலரும் கடுமையான விமர்சனங்களை செய்து வந்தனர்.
இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வரும் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும்.
மேலும் அதிமுக- பாஜக கூட்டணியில் கனவில் கூட பிரச்சனை வராது. அதிமுக- பாஜக கூட்டணி உண்மையான வெல்லக்கூடிய கூட்டணியாக இருக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு அல்ல, அது இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டு மாநாடு என தெரிவித்தார்.