புஷ்பா திரைப்படம் வாயிலாக பிரபலமான அல்லு அர்ஜுன் இந்தி படம் ஒன்றில் நடிக்க ரூ.125 கோடி சம்பளம் பேசியுள்ளார். இதனால் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரிடம் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் திரையுலகில் நடிக்க தனக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடி கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.

மச்சிலிபட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பவன் கல்யாண் பேசியதாவது “நான் சினிமாவில் நடித்து நிறைய சம்பாதிக்கிறேன். குறிப்பாக ஒருநாள் நடிப்பதற்கு ரூ.2 கோடி வாங்குகிறேன். இதனிடையே மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன்” என்று அவர் கூறினார். அண்மையில் பவன் கல்யாண் ஒரு படத்தில் 35 நாட்கள் நடிக்க ரூ.75 கோடி வாங்கியதாக சொல்லப்படுகிறது.