EPS தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, “ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அதை நாங்கள் செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து பிறகு தான் முடிவு எடுத்தோம்” என கூறினார். அதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, யார் யாருக்கு ஆதரவு தருகின்றனர் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என குறிப்பிட்டார்கள். இவ்வழக்கு மீதான விசாரணை இன்னும் நடந்து வருகிறது.