
மதுரை மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பெருமாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர் மூலம் பெண் தேடி உள்ளார். அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற தரகர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் 2 பெண்களை திருமணத்திற்கு பேசி முடிப்பதற்காக கூறி ஏமாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் அருணா தேவி என்ற பெண்ணை அழைத்து வந்து திருமணம் முடித்து வைப்பதாக கூறியுள்ளார். அதன்பின் தரகரிடம் கமிஷனாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட பெருமாயி, தரகர் விஜயா மீது காவல்நிலையத்து புகார் அளித்தார்.
அதன்படி விசாரணை நடத்திய காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட விஜயா, காளீஸ்வரி, அருணா தேவி, சினிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா மற்றும் முரளிதரன் ஆகிய 7 பேரை மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விஜயா, காளீஸ்வரி மற்றும் அருணாவை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், திருமணத்திற்காக பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருமணம் முடிந்த பிறகு, இவர்கள் பணம், நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றதாகவும் கூறப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.