
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறுமி கடலூர் சிறுப்பாக்கத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி தனது பாட்டியுடன் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோவில் பூசாரியான ராமலிங்கம் என்பவர் சிறுமியிடம் உனது பாட்டிக்கு வெற்றிலை பாக்கு வாங்கி வரலாம் வா என கூறி மோட்டார் சைக்கிளில் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அருகில் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் ராமலிங்கத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.