முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும். இந்த விருது ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த உத்தரவின்படி திரைப்பட இயக்குனர் எஸ். பி.முத்துராமன் தலைமைக் குழு இரண்டு நபர்களை தேர்வு செய்துள்ளது.

அதில் அவர் புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவர். சகாத்தியா அகாடமி விருது பெற்ற முத்தமிழ் கலைஞரால் பாராட்டப்பட்ட மு. மேத்தாவிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக தென்னிந்தியாவின் இசைக்குயில் என்றும் மெல்லிசை ராணி என அழைக்கப்படும் பாடகி பி.சுசிலா விற்கும் இந்த ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது. இந்த விழா தலைமைச் செயலகத்தில் 30. 9.2024 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.