ஜப்பானிய மக்களின் கதைகளில் ஆழமாக நம்பக்கூடிய ஒரு நம்பிக்கை “டூம்ஸ்டே மீன்” இந்த வகையான துடுப்பு மீன்கள் கடல் கடவுளின் தூதர் என கருதப்படுகிறது. இந்த மீன் பொதுவாக ஆழ்கடலில் வாழக்கூடியவை.

குறிப்பாக பூகம்பங்கள் அல்லது சுனாமிகளுக்கு பிறகு கடலின் மேற்பரப்பிற்கு அருகில் அரிதாக தோன்றும். அதனால் ஜப்பானிய மக்கள் இந்த வகை மீன்கள் அழிவின் முன்னோடிகள் என கூறுகின்றனர். இந்த வகை மீனை ஓர்ஃபிஷ்கள் என அழைப்பர்.

 

View this post on Instagram

 

A post shared by நீரின் மகன் (@neerinmagan)

அவை கிட்டத்தட்ட 11 மீட்டர் நீளம் வளரக்கூடியவை. அதன் உடல் அமைப்பு நீளமாகவும், மெல்லியதாகவும் ரிப்பன் போன்ற அமைப்பிலும் கருஞ்சிவப்பு நிற முதுகுத் துடுப்புடன் காணப்படும். பொதுவாக அதை பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடலின் ஆழ் கடல்களில் காணலாம்.

தற்போது இன்ஸ்டாகிராமில் தமிழக மீனவர்கள் இந்த வகையான மீனை பிடித்த காட்சிகள் குறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பல மீனவர்கள் சேர்ந்து தூக்கியபடி போஸ் கொடுத்தனர். மேலும் இந்த மீன் உலகின் அழிவின் மீன் என்றும் மீனவர்கள் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.