
இந்திய நாடாளுமன்றத்தால் ஆர்டிஐ கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை கேட்கவும், தகவல்களை பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தின் கீழ் பொதுமக்கள் www.rtionline.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களது சந்தேகங்களை மனுக்களாக அனுப்பலாம். அந்த மனுக்களின் நிலைமை, மேல்முறையீடு தாக்கல் போன்றவற்றை இணையதளத்திலேயே பார்த்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஆர்டிஐ இணையதள பக்கத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து மனுக்களின் ஈமெயில் முகவரியும் otp மூலம் சரிபார்க்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் மக்களின் தனி உரிமை மற்றும் தரவு பாதுகாப்பு, இணையதளத்தில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.