
எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பயோமெட்ரிக் அடையாளம் பற்றிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசும் எண்ணெய் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. அதில் PMUY மற்றும் PAHAL திட்டங்களில் பயன் பெறும் பயனாளர்களுக்கு ஆதார் அட்டையிலான e-KYC பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் e-KYC செய்ய மக்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்தலாம். ஏஜென்சிகளுக்கு நேரடியாக சென்று ஆதார் அட்டை மற்றும் கடந்த சிலிண்டர் பில் மூலம் பதிவு செய்யலாம். அல்லது மொபைல் செயலிகள் வழியாக Indane, Bharath Gas, HPGas போன்ற நிறுவனங்களின் செயலிகளில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர்கள் நிறுத்தப்படும் என்று உறுதி செய்யப்படாத தகவல் வெளியானதால் ஏராளமானவர்கள் ஏஜென்சிகளை நோக்கி வருகிறார்கள். இதனால் கேஸ் ஏஜென்சிகளில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர்கள் வழங்கப்படாது’ என்ற தகவல் வெளியானது.
இதை எண்ணெய் நிறுவனம் மறுத்துள்ளது. சேவை நிறுத்தப்படுவதில்லை. ஆனால் திட்டங்களில் வரும் நலன்களைப் பெற e-KYC கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த e-KYC கட்டாயம் என்று எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்தது அல்ல மத்திய அரசின் உத்தரவு. இது எப்போது வேண்டுமானாலும் எளிதாக பதிவு செய்யலாம். கால அவகாசம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமே ஒரே குடும்பத்தில் பல எல்பிஜி கணக்குகளை பதிவு செய்யப்படும் மோசடிகளை தடுப்பதற்காகத்தான்.