கோவை அருகே பெண் ஒருவர் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசிய புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர் தாய்பால் தானம் செய்திருந்தார். தற்போது கோவை வடவள்ளி டி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வித்யா என்பவர் 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக அவர் கொடுக்கும் தாய்ப்பால் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கியில் சேர்க்கப்படுகின்றது. பின்னர் குறைவான எடையுடன் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு அது வழங்கப்படுகின்றது. ரத்தம், உடல் உறுப்பு ஆகியவற்றை தானம் செய்தது போன்றது தாய்ப்பாலும் சாதனை தானே என்று சாதனையாளர் ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளார்.