
சென்னை மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். ஐ.எஸ் இயக்கத்திற்கு ஏற்கனவே ஆட்களை திரட்டிய இவர் வயதான நிலையில் மீண்டும் அது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் அப்துல் பாசித்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அப்துல் பாசித் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று அங்கிருந்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களை மூளை சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக வாலிபர்களை மாற்றுவதற்காக இவர் அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநில உளவு பிரிவு காவல் துறையினரும், மத்திய உழவு பிரிவு அதிகாரிகளும் அப்துல் பாசித்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.