முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தற்போது சென்னையில் ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கத்தில் வரவுள்ள ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு 28ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த உற்பத்தி ஆலை சுமார் 9000 கோடி ரூபாய்க்கு 400 ஏக்கரில் அமைக்க உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இதன் மூலம் ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பணப்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பில் 250 ஏக்கர் பரப்பளவில் ஒரு மெகா உற்பத்தி ஆலை பூங்காவிற்கும் முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம் 20,000 வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர். ராணிப்பேட்டையில் உள்ள தோல் காலணி உற்பத்தி ஆலையின் தரத்தை உயர்த்தி அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் இந்த மெகா காலணி ஆலை அமைக்கப்படுவதாக கூறியுள்ளனர்.