
தமிழ்நாட்டில் 1,000 டாஸ்மாக் மதுக்கடைகளில் புதிய வசதி அறிமுகமாகிறது. இந்த வசதி மூலம் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு தான் கடை பணியில் இருக்க வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,829 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டில், இந்த கடைகளின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்ததாகவும், வரவிருக்கும் ஆண்டில் இது 50,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மாநில அரசுக்கு, டாஸ்மாக் வருமானம் மிக முக்கியமாக கைகொடுக்கின்றது.
இதற்கான அடிப்படையில், டாஸ்மாக் கடைகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘டி’ என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்யும் ‘ஏ’ பிரிவு கடைகள் 1,000 இருக்கின்றன. இப்பொது, இந்தக் கடைகளில் 2 புதிய விற்பனை பிரிவுகள் தொடங்கப்பட இருக்கின்றன. இது, மதுப்பிரியர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை குறைக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘கியூ.ஆர். கோடு’ மூலம் மது விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் கூடுதல் விலையில் மது வாங்க முடியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த புதிய வசதியால், வாடிக்கையாளர்கள் மிகச் சுலபமாக விற்பனை செய்யும் இடத்தில் உள்நுழைந்து வாங்க முடியும்.