தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் தற்போது ஜவான் மற்றும் இறைவன் உள்ளிட்ட 2 படங்கள் உருவாகி வருகிறது. அண்மையில் நயன்தாராவின் 75 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இப்போது அவர் கைவசம் இருக்கும் 3 படங்களின் அறிவிப்பு மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது.

அதோடு அறிவிப்பு வெளிவராத பல திரைப்படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார். அதன்படி, விக்னேஷ் சிவன் டைரக்டில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோன்று ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திலும் தனக்கென்று தனித்துவம் உள்ள ரோலில் நடிக்கவுள்ளாராம் நயன்தாரா.

மேலும் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகும் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி நிவின் பாலியுடன் டியர் ஸ்டுடென்ட்ஸ், துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புது படம் என நயன்தாரா கிட்டத்தட்ட 9 படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.