இந்தி சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சல்மான்கான். மானை வேட்டையாடிய சர்ச்சையில் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. இதனால் அவர் பாதுகாப்போடு வெளியில் செல்கிறார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கான் கலந்துகொண்டு பேசியபோது “இந்தி சினிமா துறைக்கு வந்திருக்கும் இளம் நடிகர்கள் பலரும் திறமையானவர்களாக இருக்கின்றனர்.

இதன் காரணமாக மூத்த நடிகர்களான எங்களை குறைத்து மதிப்பிடவேண்டாம். நானும், ஷாருக்கான், அஜய்தேவ்கான், அமீர்கான், அக் ஷய்குமார் போன்றோரும் அவ்வளவு சுலபமாக சினிமா துறையை விட்டு விலகவே மாட்டோம் என்று அவர் கூறினார் .