மணிரத்னம் டைரக்டில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். கடந்த வருடமே இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகியது. வருகிற ஏப்ரல் 28 இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும். இந்நிலையில் பெங்களூரில் நடந்த இந்த படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா போன்றோர் பங்கேற்றனர்.

இதில் ஜெயம் ரவி கூறியதாவது “நான் நல்லவனாக நடிப்பதற்கு விரும்பவில்லை. ஏனென்றால ஒரே மாதிரியான நடிப்பை மட்டும் வெளிபடுத்த முடியும். அதேநேரம் கெட்டவனாக நடித்தால் தன் நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தலாம்.

அதிலும் குறிப்பாக இந்த ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சார் நிறைய திறன்களை சொல்லி கொடுத்தார். இக்கதாபாத்திரத்திற்காக யாரையும் பார்த்து நான் காப்பியடிக்க விரும்பவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.