
மன்னார்குடி அருகிலுள்ள சுந்தரக் கோட்டையில் இன்று(ஜன,.24) சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “ஒரு கட்சியில் இரண்டு, 3 பேர் சேர்ந்து முடிவு எடுக்க இயலாது. அவ்வாறு முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக. மிகப்பெரியது. பாஜக அலுவலகம் போகும் நிலையில் அதிமுக இல்லை.
இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய இயலாது. மேலும் நான் உயிருடன் இருக்கும் வரையிலும் இரட்டைஇலை சின்னத்துக்கு ஆபத்து வர விடமாட்டேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும்” என்று அவர் கூறினார்.