மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. அதே கட்டிடத்தில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. இந்த வங்கிக்கு இரவு காவலாளி கிடையாது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து பணத்தை திருடி சென்றுள்ளன.

இந்த இயந்திரத்தில் லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதனால் எவ்வளவு திரட்டு போனது என்று வங்கி நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.