
இந்து முன்னணி சார்பில் மதுரையில் வருகிற 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பாஜக தேசிய தலைவர்கள் போன்ற பலர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பாஜக மூத்த தலைவர்கள் பலர் 15 ஆம் தேதியிலிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இது சங்கிகள் மாநாடு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும் விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாடு தொடர்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, எங்களை பொறுத்தவரை முருகர் தமிழ் கடவுள். திமுக தோல்வி பயத்தில் இருப்பதால் முருக பக்தர்கள் மாநாட்டை விமர்சித்தது என்று தெரிவித்தார்.