திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொடுக்கல்-வாங்கல் தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வீட்டில் இருந்த ஓமந்தூரானை படுகொலை செய்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஓமந்தூரானின் மனைவி பாண்டீஸ்வரி, உறவினர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது ஓமந்தூரானின் 17 வயது மகள், தாசரிபட்டியில் சின்ன மாமனார் பாஸ்கரன் (54) ஆகியோருக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் நேற்று  2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தந்தை கொலை வழக்கில் ஒரு ஆண்டுக்கு பின் மகளும், உறவினரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.