லியோனஸ் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றோர் நேரடியாக மோதிக்கொள்ளும் நட்புறவு கால்பந்து போட்டி சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் நேற்று நடந்தது. அல் நாசர் அணிக்கு ஒப்பந்தமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் லெவன் அணிக்காகவும், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக மெஸ்ஸியும் களம் இறங்கினர்.

போட்டி துவங்குவதற்கு முன் இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீரர்களுக்கு வாழ்த்து கூறினார். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியானஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் அமிதாப் பச்சன் கைகுலுக்கி வாழ்த்து சொன்ன புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.