கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவாஜி காலனியில் எம்.பி.ஏ பட்டதாரியான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை தீபக் கிளிக் செய்து டெலிகிராம் குரூப்பில் இணைந்து தனது விவரங்களை பதிவிட்டார். பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி தீபக் பல்வேறு தவணைகளாக 14 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். அதன் பிறகு அவருக்கு லாபத்தொகை கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. இதுகுறித்து தீபக் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.