
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, ஸ்டாலின் ஆட்சியில் மக்கள், திமுக தொண்டர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே திருப்தியாக உள்ளது.
மக்கள் உங்கள் ஆட்சியை விரும்பவில்லை. திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்ற வில்லை. கடைக் கோடிக்கு திட்டங்களை சேர்ப்பதில் 100% ஸ்டாலின் அரசு தோல்வி அடைந்து விட்டது. இதனால் தோற்றுப்போன அரசை வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டார்கள்.
இன்று தமிழக முழுவதும் எடப்பாடி யாருக்கு ஆதரவு இருக்கிறது. இன்றைக்கு பாஜக மத்திய தலைமை தெளிவாக அறிவித்திருக்கிறது. டெல்லிக்கு தலைமை மோடி ஜி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிச்சாமி. சிலர் தாங்கள் இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ள தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எடப்பாடியார் தலைமையில் தான் அதிமுக ஆட்சி மலரும் அவர் தலைமையில் தான் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
அவரை முதலமைச்சராக முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்து மாபெரும் வெற்றி என்பது ஒரே இலக்கு. மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் ராமனாக எடப்பாடியாரை முன்னிறுத்தி திமுக என்கிற அரகரை அந்த தீய சக்தியை வீழ்த்துவார்.
இதிலே எந்த விதமான இடையூறும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்களும் தெளிவாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.