ஹைதராபாத்தில் 18 வயதான சிறுமி ஒருவர் சமூக ஊடகத்தின் மூலம் 19 வயதான வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து வாலிபர், சிறுமியை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த சிறுமி அவரை பார்ப்பதற்காக சென்றபோது அந்த வாலிபர் ஒரு ஹோட்டல் ரூமை புக் செய்து அதில் அந்த சிறுமியை வைத்து பூட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், 20 நாட்களுக்கு பின்பு சிறுமியின் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் சிறுமி எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்றும், யார் இதை செய்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டதுடன் அந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வாலிபரிடம் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.