தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னடத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதையடுத்து இவர் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் திருமணமாகி 2 ஆண்டுகளில் சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க வந்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தில் அவர் நடிக்கிறார். கன்னடத்தில் தயாராகும் இப்படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட முடிவுசெய்துள்ளனர். இந்த படத்தை விஷால் ஆத்ரேயா டைரக்டு செய்திருக்கிறார்.