தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இவர் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்திக்கும் பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

. இதற்காக அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோரை சந்தித்து கார்கே பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில் டெல்லி முதல்வரும் தற்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதற்காக தற்போது பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.