இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையானது அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் பரவிவரக்கூடிய கடும் காய்ச்சல் மற்றும் இருமல் நோய்த் தொற்றுகளால் மருந்துகளின் விற்பனை 20 -25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனையானது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

காய்ச்சல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு 1 லிட்டர் தண்ணீரில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதன் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.