மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. இந்நிலையில் இக்கோயிலின் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்களை ஓத வேண்டும் என்று உப்பிலிபாளையத்தில் வசிக்கும் டி.சுரேஷ் பாபு என்பவர் அறநிலைத்துறைக்கு மனு அளித்திருந்தார்.

ஆனால் இது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவர், மருதமலை முருகன் கோவிலில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.