
மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் “மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தேவை இல்லை” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் இந்தி மற்றும் மராத்தி மொழி பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி மொழி பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் என மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதோடு மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான், இங்குள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சட்டசபையில் பேசினார். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஏற்கனவே மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகின்றன, ஆனால் சில வேளாண் பொறியியல் தொடர்பான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் இந்தி- மராத்திய பிரச்சனை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் பொறியியல் படிப்பு களுக்கான பாட புத்தகங்கள் மராத்தியில் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் மராத்தியில் பொறியியல் படிப்புகளை நடத்த மாநில அரசு இப்போது முடிவு கொண்டு வந்துள்ளது. ஆகவே இந்த தேர்வுகள் மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.