
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 28-ஆம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்போனை தவறவிட்டனர். இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மடிப்பாக்கம் பஜனை கோவில் தெருவில் வசிக்கும் மகாலட்சுமி என்பவர் விலை உயர்ந்த செல்போன் சாலையோரம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த செல்போனை எடுத்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் அந்த தம்பதியினரை வரவழைத்து உரிய அடையாளத்தை கேட்டுசெல்போனை ஒப்படைத்தனர். இந்நிலையில் நேர்மையாக செல்போனை ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீசார் பாராட்டியுள்ளனர்.